Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
கர்நாடக அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் 2020 என்ற புதிய வரைவை அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள் உயர் அதிகாரியின் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் எழுதக் கூடாது. துறையின் உயர் அதிகாரியின் முறையான அனுமதி இல்லாமல் இலக்கியம், ஆன்மிகம், கலை உள்ளிட்ட பத்திரிகைகள் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது. மேலும் மத்திய மாநில அரசுகளை விமர்சித்து எழுதக் கூடாது. மேலும் உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் அரசு ஊழியர்கள் திரைப்படம், தொலைக்காட்சி தொடர் ஆகியவற்றிலும் நடிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT