Published : 07 Aug 2020 06:25 AM
Last Updated : 07 Aug 2020 06:25 AM
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டின் பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரை நாடு கடத்தும் வகையில் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு உச்ச நீதிமன் றத்தை விஜய் மல்லையா நாடியுள்ளார். இதனிடையே கடந்த 2017-ல் பிரிட்டனில் இருந்தவாறு தனது குடும்பத்தாருக்கு டியாஜியா நிறுவனத்திடம் இருந்து வந்த 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை விஜய் மல்லையா மாற்றியுள்ளார். இது விதிமுறை மீறல் என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்றும் உச்ச நீதிமன்றம் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பான வழக்கை மறு ஆய்வு செய்யக் கோரி விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் யு.யு.லலித், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர்.
அப்போது, விஜய் மல்லையா தாக்கல் செய்த மறு ஆய்வு மனு கடந்த 3 ஆண்டுகளாக ஏன் பட்டியலிடப்படவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஒரு ஆவணம் பதிவில் இல்லை என்று கூறிய நீதிபதிகள், வழக்கை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT