Published : 14 Jun 2020 01:21 PM
Last Updated : 14 Jun 2020 01:21 PM
உலகம் முழுதும் கரோனா வைரஸைக் கண்டாலே கடும் அச்சம் நிலவிவருகிறது தடுப்பு மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் என்று இதை ஒழிக்க மருத்துவ அறிவியல் துறை பாடுபட்டு வரும் நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர் கரோனா தேவி என்று தன் பூஜை அறையில் கரோனா பிம்பத்தை வழிபட்டு வருகிறார்.
கடக்கல்லில் உள்ள அனிலன் என்பவர் தனது இந்தப் பழக்கத்தை தன் வழியிலான விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்கிறார். அவர் கூறும்போது, “கரோனா வைரஸை பெண் கடவுளாக வணங்குகிறேன் தினமும் அர்ச்சனை செய்து பூஜை செய்கிறேன். இது எதற்காக என்றால் கரோனா செயல்வீரர்களான சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருந்து, தடுப்பூசி கண்டுப்பிடிப்பில் இறங்கியிருக்கும் விஞ்ஞானிகளுக்காகவும்தன” என்கிறார்.
நெட்டிசன்கள் இவரைக் கடுமையாக கிண்டல் செய்தும், விமர்சித்து வந்தாலும் அசருவதாக இல்லை அனிலன். ”இது என்னுடைய தனிவழி, விழிப்புணர்வு வழி’ என்கிறார் அவர்.
பலரும் அவரது இந்தச் செயலைக் கண்டிக்க, சிலர் இவர் புகழ்ச்சிக்காகச் செய்கிறார், விளம்பரத்துக்காகச் செய்கிறார் என்றும் வேறு சிலர் இது மூடநம்பிக்கை என்றும் சாடியுள்ளனர்.
அனிலன் ஆனால் பேசும்போது கோயில்களை இப்போது திறப்பது கூடாது என்கிறார், வீட்டிலேயே வழிபடுங்கள் என்கிறார்.
அனிலன் மேலும் கூறியதுதான் ஆச்சரியம், “மொத்தம் 33 கோடி இந்துக் கடவுள்கள் இருக்கின்றனர். வைரஸையும் நான் நம் அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளின் படி கும்பிடுகிறேன்” என்கிறார்.
ஆனால் தன் வீட்டுக்கு வந்து கரோனா தேவியை வழிபட்டு காணிக்கைச் செலுத்த அனுமதிப்பதில்லையாம்.
இந்த கரோனா ஆராதனை குறித்து எழுத்தாளர், விமர்சகர் ஒருவரிடம் கேட்ட போது, “ஒரு புறம் நம் சமூகத்தில் படித்தவர்கள் அதிகம் உள்ளனர் இன்னொரு புறம் இன்னமும் மூடநம்பிக்கைகளும் கூடவே உள்ளன. இரண்டு வேறு வேறு உலகங்களை முரண்பாடில்லாமல் எப்படி வைத்திருக்க முடிகிறது, நமக்கு இதில் தவறிருப்பதாகத் தோன்றுவதில்லை. இந்த கரோனா ஆராதனை இதன்
கேரளாவில் மட்டுமல்ல பிஹார், ஜார்கண்ட், உ.பி., மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களிலும் கிராமப்புறங்களில் கரோனா தேவி வழிபாடு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT