Published : 14 Jun 2020 10:14 AM
Last Updated : 14 Jun 2020 10:14 AM
இந்தியாவில் ஒரே நாளில் அதிக அளவு பாதிப்பாக 11,929 பேருக்கு கரோனா தொற்று பாசிட்டிவ் ஆகியுள்ளது, ஒரே நாளில் 311 பேர் பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 9,195 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 379 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 3,830 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது, இங்கு பாதிப்பு எண்ணிக்கை 42,687, பலி எண்ணிக்கை 397.
மாநில வாரியாக மொத்த பாதிப்பு, மொத்த பலி எண்ணிக்கை விவரம்:
மஹாராஷ்டிரா - 1,04,568- 3,830
தமிழகம்- 42,687; 397
டில்லி -38,958; 1,271
குஜராத்-23,038; 1,448
உ.பி.,-13,118; 385
ராஜஸ்தான்-12,401; 282
மேற்கு வங்கம்- 10,698; 463
ம.பி.,-10,641; 447
கர்நாடகா-6,824; 81
ஹரியானா-6,749; 78
பீஹார்-6,290; 39
ஆந்திரா -5,965; 82
காஷ்மீர்-4,878; 55
தெலுங்கானா-4,737; 182
ஒடிசா-3,723; 10
அசாம்-3,718; 08
பஞ்சாப் 3,063; 65
கேரளா-2,407; 19
உத்தர்காண்ட்-1,785; 23
ஜார்க்கண்ட்-1,711; 08
சத்தீஸ்கர்-1,512; 06
திரிபுரா-1,046; 01
கோவா-523; 0
ஹிமாச்சல பிரதேசம்-502; 6
மணிப்பூர்-449; 0
லடாக்-437; 01
மிசோரம்-107; 0
நாகலாந்து-163; 09
சண்டிகர்-345; 05
புதுச்சேரி-176; 2
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT