Last Updated : 16 Aug, 2015 10:32 AM

 

Published : 16 Aug 2015 10:32 AM
Last Updated : 16 Aug 2015 10:32 AM

ஊப்ளியில் 1500 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊர்வலம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அசத்தல்

கர்நாடக மாநிலம் ஊப்ளியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுதந்திர தினத்தையொட்டி 1500 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றன‌ர்.

நாட்டின் 69-வது சுதந்திர தினத்தையொட்டி, கர்நாடக மாநிலம் ஊப்ளியில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில் 3 ஆயிரம் மாணவர்கள், ‘வாக் ஃபார் தி நேஷன்’ என்ற தலைப்பில் 10 அடி அகலமும் 1500 அடி நீளமும் கொண்ட தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். 3 கி.மீ. வரை சென்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்களும் கலந்து கொண்டனர். இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாடு களை சேர்ந்த சுற்றுலாவாசிகளும் கண்டு வியந்தனர்.

இதுபோல் கலபுராகி நகரில் 109 மீட்டர் தேசியக் கொடியுடன் இளைஞர்கள் ஊர்வலம் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x