Published : 02 May 2020 03:25 PM
Last Updated : 02 May 2020 03:25 PM

திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: சொந்த ஊர் செல்ல ஏற்பாடு

திருவனந்தபுரத்தில் இருந்து செல்லும் சிறப்பு ரயிலில் செல்வதற்காக ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்கள் அங்கங்கே சிக்கிக்கொண்டனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தன.

இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று இரவு பிஹாருக்கு ரயில் புறப்படுகிறது.

இதில் செல்வதற்காக கேரளாவின் தெற்கு பகுதியில் இருந்து ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் சமூகவிலகலை கடைபிடித்து சோதனை செய்யப்பட்ட பிறகே ரயிலில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x