Published : 25 Apr 2020 05:02 PM
Last Updated : 25 Apr 2020 05:02 PM

கடைகள் திறப்பு: உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டும் நெறிமுறை

புதுடெல்லி

கடைகள் திறப்பது பற்றி உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

கடைகள் திறந்து இருப்பதை அனுமதிப்பது குறித்த ஊரடங்கு பற்றிய வழிகாட்டுதல்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்த உத்தரவை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

* வணிக வளாகங்களில் உள்ள கடைகளைத் தவிர மற்ற கடைகளை கிராமப்பகுதிகளில் திறந்து கொள்வத்றகு அனுமதி.

* நகர்ப்புறங்களில் அனைத்து தனித்து இயங்கிவரும் கடைகளும், குடியிருப்புகளுக்கு அருகிலிருக்கும் கடைகளும், குடியிருப்பு வளாகத்தில் உள்ள கடைகளும் திறந்து கொள்ள அனுமதி.

மின்னணு வணிக நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வத்றகு மட்டுமே தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றன என்று தெளிவு படுத்தப்படுகிறது.

கொவிட்-19 மேலாண்மைக்கான தேசிய உத்தரவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, மதுபானங்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனை மீதான தடை தொடர்ந்து நீடிப்பதாக மேலும் தெளிவு படுத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளபடி, கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகள் என, அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்ட கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படமாட்டாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x