Published : 16 Apr 2020 11:34 AM
Last Updated : 16 Apr 2020 11:34 AM

டெல்லியில் பிசா டெலிவரி செய்தவருக்கு கரோனா; 73 வீடுகளை தனிமைப்படுத்த போலீஸார் உத்தரவு

புதுடெல்லி 

டெல்லியில் பிசா டெலிவரி செய்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால் அவர் பிசா வழங்கிய 73 வீடுகளையும் போலீஸார் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்புடன் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் வீடுகளுக்கு பிசா டெலிவரி செய்த இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கூறியதாவது:

தெற்கு டெல்லியில் வீடுகளுக்கு சென்று பிசா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய 17 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களை தனியிடத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி அவர் பிசா வழங்கிய 73 வீடுகளையும் போலீஸார் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். மேலும் யார் யாருடன் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x