Published : 11 Aug 2015 08:56 AM
Last Updated : 11 Aug 2015 08:56 AM
ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி ஆகிய வடமாநிலங்களில் உணரப் பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவலின்படி ஆப்கானிஸ் தானின் வடகிழக்குப் பகுதியில் ஹிந்துகுஷ் மலையில் பிற்பகல் 3.35 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.2 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உணரப்பட்டது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர். தலைநகர் டெல்லியிலும் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பஞ்சாப், ஹரியாணாவிலும் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. நில நடுக்கத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட் டதாக தகவல் இல்லை.
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் 4.9 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டு புவியியல் மையம் அறிவித்தது.
கோர்க்கா பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த நிலநடுக் கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.
இதேபோல சாலமன் தீவு களிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.9 ஆக பதிவானது. உயிரிழப்பு, பொருட்சேதம் குறித்து உடனடியாக தகவல் இல்லை. சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT