Published : 11 Aug 2015 09:06 AM
Last Updated : 11 Aug 2015 09:06 AM
காவல்துறை துணை ஆணையர் உட்பட நான்குபேருடன் காணாமல் போன ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் அடர்ந்த வனப்பகுதிக் குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அருணாசலப் பிரதேச மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) எஸ்.நித்தியானந்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, அருணாசலப் பிரதேச அரசுக்குச் சொந்தமான பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் நஹர்லகுன் பகுதியிலிருந்து புறப்பட்டு கோன்சா என்ற இடத்தில் தரை யிறங்கியது. மோஹன்பஹாரி விமான நிலையத்துக்கு அந்த ஹெலிகாப்டர் செல்லவிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் காவல் துறை துணை ஆணையர் கமலேஷ் குமார் மற்றொரு அரசு ஊழியருடன் பயணம் செய்தார். விமானிகள் எம்.எஸ். பிரா, ராஜீவ் ஹோஸ்க்டே அதனை இயக்கினர். மோஹன்பஹாரி விமான நிலையத் துக்குச் செல்லும் வழியில் அந்த ஹெலிகாப்டர் மற்றும் வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை யுடனான தொடர்பு அறுந்தது.
அந்த ஹெலிகாப்டர், அருணா சலப் பிரதேச மாநிலம் திராப் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக் குள் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. தின்சா மற்றும் சங்கிலின் கிராமங்களுக்கு இடையே அதன் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காவல் துறை தலைவர் எஸ். நித்தியானந்தம் கூறும்போது, “சிதைந்த பாகங்கள் கண்டறி யப்பட்ட இடத்தின் சுற்றுப் பகுதிகளில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலி காப்டரில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து தெரியவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT