Published : 27 Aug 2015 10:10 AM
Last Updated : 27 Aug 2015 10:10 AM
ஆந்திர மாநிலம், விஜயவாடா, கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்த நாகா - லட்சுமி தம்பதிக்கு கடந்த 17-ம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் 2வது ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்தது முதல், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த வாரம் குண்டூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன், குழந்தையை எலிகள் கடித்துள்ளன. இந்நிலை யில் செவ்வாய்க்கிழமை இரவு, எலிகள் குழந்தையின் இடது கண், கன்னம், கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடித்ததால் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT