Published : 11 Aug 2015 09:12 AM
Last Updated : 11 Aug 2015 09:12 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடுப் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந் தத்தை மீறி, இந்திய ராணுவ நிலை கள் மீது தாக்குதல் நடத்தியது.
நேற்று முன்தினம் இரவு பூஞ்ச் மாவட்டத்தில் ஹமீர்பூர் நிலை மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. ஆனால் இரு தரப்பிலும் எந்த உயிர் சேதமோ அல்லது காயங்களோ ஏற் படவில்லை, என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய் வதற்காக, கடந்த 3 நாட்களாக, ஹமீர்பூர் மற்றும் சப்சியான் நிலை கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலோடு சேர்த்து கடந்த 9 நாட்களில் இதுவரை 17 அத்துமீறல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT