Published : 20 Aug 2015 12:34 PM
Last Updated : 20 Aug 2015 12:34 PM
ஜம்முவில் சர்வதேச எல்லை அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் நடமாட்டம் உணரப்பட்டதையடுத்து எல்லை பாதுகாப்பு வீரர்கள் லேசான துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இது குறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஜம்மு மாவட்டம் அர்னியா பகுதி அருகே சந்தேகத்துக்குரிய வகையில் இருவரது நடமாட்டம் இருந்தது.
அவர்கள் இருவரும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 70 மீட்டர் தூரத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, எல்லை பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய தரப்பிலிருந்து தாக்குதல் வந்தததையடுத்து அவர்கள் இருவரும் தப்பி ஓடினர்.
இருப்பினும் இது ஊடுருவல் முயற்சியாக இருக்க வாய்பில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT