Published : 10 Jan 2020 07:00 AM
Last Updated : 10 Jan 2020 07:00 AM

கடந்த 2018-ல் 10,349 விவசாயிகள் தற்கொலை

கடந்த 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் 10,349 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1,34,516 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் மகாராஷ்டிரா (17,972), தமிழ்நாடு (13,896), மேற்கு வங்கம் (13,255), மத்திய பிரதேசம் (11,775), கர்நாடகா (11,561) ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 50.9 சதவீதம் பேர் ஆவர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 7.7 சதவீதம் பேர் (10,349) விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள். எனினும், கடந்த 2016-ம்ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையைவிட (11,379) இது குறைவு. எனினும், கடந்த 2018-ம் ஆண்டில் மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா, உத்தராகண்ட், மேகாலயா, கோவா, சண்டிகர், டாமன் டையு, டெல்லி, லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொள்ளவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x