Published : 28 Aug 2015 09:02 AM
Last Updated : 28 Aug 2015 09:02 AM
ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கைக்குட்டையால் முகத்தை மூடிய மர்ம நபர்கள், மாணவிகள், பெண்களுக்கு ஊசி போட்டு தப்பி வருகின்றனர். இவர்களின் ரத்தத்தை சேகரித்து ஹைதராபாதுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டது. இது வெறும் மயக்க மருந்துதான் என மருத்துவ குழுவினர் அறிக்கை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மர்ம நபர்களைப் பிடிக்க 45 போலீஸ் தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மேற்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி பாஸ்கர் பூஷன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT