Published : 06 Nov 2019 08:17 PM
Last Updated : 06 Nov 2019 08:17 PM

பாஜகவிடமிருந்து உத்தவ் தாக்கரேவுக்கு எந்த தகவலும் வரவில்லை: சஞ்சய் ராவுத்

மும்பை, பிடிஐ

மகாராஷ்டிரா அரசு அமைவதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை என்று சேனா எம்.பி. சஞ்சய் ராவுத் தெரிவித்தார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, பாஜக தலைவர்கள் ஆளுநர் கோஷ்யாரியைச் சந்தித்தனர் என்றால் அது எங்களுக்கு ஏற்புடையதுதான் என்றார்.

“நாங்கள் ஆளுநரைச் சந்தித்தோம். இந்தியக் குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அதாவலேவும் ஆளுநரைச் சந்தித்தார், இந்நிலையில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்தித்தால் அவர்கள் அதிக இடங்கள் பெற்ற தனிக்கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்கட்டும்.

நாங்கள் முதலிலிருந்து இதைத்தான் கூறிவருகிறோம் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால் அவர்கள் ஆட்சியமைக்கட்டும் என்றுதான் கூறுகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x