Published : 22 Jul 2015 09:21 AM
Last Updated : 22 Jul 2015 09:21 AM
தலைமறைவாக உள்ள மாவோயிஸ்ட்கள் மற்றும் இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 73 பேர் பற்றிய தகவலுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு மொத்தம் ரூ.8.69 கோடி வெகுமதி அறிவித்துள்ளது.
“பொதுமக்கள் அளிக்கும் தகவலின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டால், இந்த வெகுமதி அளிக்கப்படும். இதற்கு முதல்வர் ரகுவர் தாஸ் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று நேற்று வெளியான மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கி றது.
தலைமறைவு குற்றவாளி களில் தங்கள் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிகபட்சமாக தலா ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள் ளது. மற்றவர்களுக்கு இதற்கு குறைவாக, வெவ்வேறு தொகை கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT