Published : 23 Sep 2019 08:09 PM
Last Updated : 23 Sep 2019 08:09 PM
மின்வாரியத்தில் இளநிலை பொறியாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி அழுத்தம் கொடுத்ததாக உ.பி.பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் மீது மின் துறை உயரதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு எம்.எல்.ஏ. மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது., சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இளநிலை பொறியாளர் ஒருவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி உயரதிகாரி ராம் கிஷோருக்கு எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் மொபைல் போனில் கடும் நெருக்கடி கொடுத்ததாகத் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
பணியிடமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களை கிஷோர் அவருக்கு விளக்கியும் எம்.எல்.ஏ. அவரை கடும் சொற்களால் வசைபாடியுள்ளதோடு, மிரட்டியும் உள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து புகாருடன் எம்.எல்.ஏ. மிரட்டிய உரையாடலின் ஆடியோ உள்ளிட்டவை போலீஸுக்கு அளிக்கப்பட்டுள்ளது, மேலும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கிஷோர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
-ஐ.ஏ.என்.எஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT