Published : 23 Sep 2019 07:41 PM
Last Updated : 23 Sep 2019 07:41 PM

அயல்நாடு வாழ் இந்தியர்கள் இனி ஆதார் அட்டைக்காக 182 நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை

புதுடெல்லி, பிடிஐ

பாஸ்போர்ட் உள்ள அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் ஆதார் அட்டைக்காக இனி 182 நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை நாடுதிரும்பியவுடனேயே விண்ணப்பிக்கலாம். இதனை அரசு அறிவிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

“என்.ஆர்.ஐ.க்கள் இந்தியா வந்தவுடனேயே ஆதார் எண்-ஐ உடனடியாகப் பெற முடியும்” என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பாஸ்போர்ட் உள்ள அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் பயோமெட்ரிக் அடையாளங்களுக்காக இனி வந்தவுடனேயே விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் 182 நாள் காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்துள்ளது.

“என்.ஆர்.ஐ. பாஸ்போர்ட்டில் இந்திய முகவரி இல்லாவிட்டாலும் ஆதார் ஆணையம் அங்கீகரித்த வேறு எந்த முகவரி நிரூபணங்களையும் சமர்ப்பிக்கலாம்” என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 5ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட் உரையில், “என்.ஆர்.ஐ.க்களுக்கு அவர்கள் வந்தவுடனேயே ஆதார் வழங்கும் நடைமுறையை முன்மொழிகிறேன்.” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x