Published : 20 Sep 2019 08:07 AM
Last Updated : 20 Sep 2019 08:07 AM
புதுடெல்லி
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் நேற்று டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடக முன்னாள் அமைச் சரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான டி.கே.சிவகுமார், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக் கில் கடந்த 3-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. மேலும் அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 1-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த டி.கே.சிவகுமாரின் உடல்நிலை தேறியதால் நேற்று மாலை அவர் திஹார் சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு பொருளாதார குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் அடைக்கப்படும் 7-வது அறையில் அடைக்கப்பட்டார். இதே வளாகத்தில் 15-வது அறை யில் முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரமும் அடைக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT