Published : 04 Jul 2015 09:19 AM
Last Updated : 04 Jul 2015 09:19 AM
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நகரங்களின் பெயர்களை பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதற்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கிவைத்தார். அதற்கான வழிகாட்டு நெறிகளையும் அவர் வெளியிட்டார்.
அதன்அடிப்படையில் நகரங் களின் பெயர்ப் பட்டியலை அளிக்குமாறு மாநில அரசுகளிடம் மத்திய அரசு கோரியுள்ளது. தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் 12 மாநகராட்சிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள் ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT