Last Updated : 21 Jul, 2015 09:02 AM

 

Published : 21 Jul 2015 09:02 AM
Last Updated : 21 Jul 2015 09:02 AM

நிறுவனத்துக்கு நிதி பெற்ற விவகாரம்: டீஸ்டாவின் வாக்குமூலத்தை பதிவு செய்தது சிபிஐ

குஜராத் கலவரத்தின்போது மாநில அரசுக்கு எதிராக சமூக சேவகி டீஸ்டா போர்க்கொடி உயர்த்தினார்.

இந்நிலையில் டீஸ்டாவுக்கு சொந்தமான சப்ரங் கம்யூனிகேஷன் அன்ட் பப்ளிஷிங் நிறுவனம் மீது சிபிஐ கடந்த 8-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. வெளிநாட்டு பங் களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யாத நிலையில் இந்நிறுவனம் வெளி நாட்டிலிருந்து ரூ.1.8 கோடியை பெற் றிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட் டுள்ளது.

இதையடுத்து, டீஸ்டா மற்றும் அவரது கணவர் ஜாவேத் ஆனந் துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையே டீஸ்டா தம்பதியை இன்றுவரை கைது செய்ய சிபிஐ நீதிமன்ற நீதிபதி அனிஸ் கான் இடைக்கால தடை விதித்தார். மேலும் இன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் டீஸ்டாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x