Published : 23 Aug 2019 08:14 AM
Last Updated : 23 Aug 2019 08:14 AM

திருமலையில் விஐபி தரிசனங்கள் தொடரலாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

என். மகேஷ்குமார்

அமராவதி

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் விஐபி பக்தர்களால் சாமானிய பக்தர்களுக்கு சுவாமியை தரிசிக்க வாய்ப்புகள் குறைவதாக புகார் உள்ளது.

இது குறித்து வெங்கட சுப்பாராவ் எனும் பக்தர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கள் சத்யநாராயணா, பிரவீண் குமார் ஆகியோர், இது குறித்து தக்க பதிலளிக்க தேவஸ்தானத் திற்கு உத்தரவிட்டனர். அதன் பேரில், கடந்த 2 மாதங்களாக விஐபிக்களின் தரிசன முறையில் பல மாற்றங்களை கொண்டு வந்த தேவஸ்தானம் அதற்குரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இவ்வழக்கு குறித்து இரு பக்க வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சாமானிய பக்தர்களுக்கு போதிய தரிசன ஏற்பாடுகளை கண்டிப்பாக செய்ய வேண்டுமெனவும், அதே சமயத்தில் விஐபி பக்தர்களுக்கும் போதிய தரிசன ஏற்பாடுகள் செய்து தர வேண்டுமெனவும் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். இதனால் இனி விஐபிக்களின் தரிசன முறை வழக்கம்போல் செயல்படுமென தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருமலை பிரதிநிதிகள் சிலர், தங்களுக்கு தேவைப்பட் டோரிடம் அதிக பணம் வசூலித்து எம்.எல்.ஏ, எம்.பி.க்களின் கடிதங் கள் மூலம் தரிசனம் மற்றும் தங்கும் அறைகளுக்கு ஏற்பாடு செய்துள் ளனர்.

இது தொடர்பாக 30 தரகர் களிடம் தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x