Published : 28 Jul 2019 09:46 AM
Last Updated : 28 Jul 2019 09:46 AM

சத்தீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக் கொலை

பிடிஐ

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள திரியா வனப்பகுதியில் நக்சல்கள் நட மாட்டம் இருப்பதாக போலீஸா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸார், சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப் பகுதிக்கு நேற்று அதிகாலை சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நகசல்கள், அவர் களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையின ரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண்கள் உட்பட 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட் டனர். அவர்களிடமிருந்து ஏராள மான ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. இந்நிலையில், தப்பி யோடிய மற்ற நக்சல்களை தேடும் பணியில் சிஆர்பிஎப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x