Published : 22 Jul 2019 09:13 AM
Last Updated : 22 Jul 2019 09:13 AM

ரூ.345 லட்சம் கோடி பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற மோடி அரசு தீவிரம்: மத்திய அரசு உயர் அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி

இந்தியாவை ரூ.345 லட்சம் கோடி பொருளாதார நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதை யடுத்து மே 30-ம் தேதி நரேந்திர மோடி 2-வது முறை பிரதமராக பொறுப்பேற்றார்.

புதிய அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டது. குறிப்பாக, விவசாயிகள், சிறு வணி கர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம், பிரதமரின் விவசாயிகளுக் கான நிதியுதவி திட்டம் அனைவருக் கும் விரிவாக்கம், தண்ணீர் மேலாண்மைக்காக புதிதாக ஜல சக்தி அமைச்சகம் உருவாக்கம் ஆகிய அறிவிப்புகள் வெளியாயின.

இதையடுத்து, இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் (ரூ.345 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்று வதற்கான அடித்தளம் அமைக்க ஏதுவாக பட்ஜெட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் விவசாயி களின் வருமானத்தை இரட்டிப் பாக்கவும் பட்ஜெட்டில் முன் னுரிமை வழங்கப்படும் என அரசு உறுதி அளித்ததாக உயர் அதிகாரி கள் இருவர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடப்பு நிதி யாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பொரு ளாதாரம் நடப்பு நிதியாண்டில் ரூ.207 லட்சம் கோடியாக வளரும் என தெரிவித்தார். இதன்மூலம் பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகிலேயே 6-வது பெரிய பொரு ளாதார நாடாக இந்தியா உரு வெடுக்கும்.

மேலும் இந்தியாவை ரூ.345 லட்சம் கோடி பொருளாதார நாடாக அதிகரிக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இதன்படி, பொருளாதார வளர்ச் சியை ஊக்குவிக்க கடந்த 50 நாட் களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசின் கொள்கை உருவாக் கத்துடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x