Published : 24 Jul 2015 09:04 AM
Last Updated : 24 Jul 2015 09:04 AM
'தி எனர்ஜி ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட்' (டெரி) அமைப்பின் புதிய தலைவராக அஜய் மதூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்தப் பதவியை வகித்து வந்த நோபல் பரிசு வென்ற அறிவியலாளர் ஆர்.கே.பச்சோரி, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 'பியூரோ ஆஃப் எனர்ஜி எஃபீசியன்ஸி' அமைப்பின் இயக்குநர் அஜய் மதூர் தற்போது 'டெரி'யின் இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். இந்த முடிவு நேற்று நடந்த டெரி ஆட்சிக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரூர்கி பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் பட்டமும், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து முதுநிலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றுள்ள அஜய் மதூர், 1986 முதல் 'டெரி'யில் பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT