Last Updated : 04 Jul, 2015 09:19 AM

 

Published : 04 Jul 2015 09:19 AM
Last Updated : 04 Jul 2015 09:19 AM

திருமணத்தை மறைத்ததாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி - குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

கடந்த 2012 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போது தனது திருமணத்தை நரேந்திர மோடி மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை தலைமை நீதிபதி (பொறுப்பு) வி.எம்.சகாய் விசாரித்து நேற்று தீர்ப் பளித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று ஓராண்டுக்குப் பிறகே வழக்கு தொடரப்பட்டுள் ளது. அதற்கான காரணத்தை மனுதாரர் குறிப்பிடவில்லை. அவரது மனுவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x