Published : 08 Jul 2015 09:50 AM
Last Updated : 08 Jul 2015 09:50 AM
பெங்களூருவில் கடந்த ஒரு வாரத் தில், சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 18 வயதுக்கு உட்பட்டவர்களின் பெற்றோர்கள் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறார்கள் தொடர்ந்து வாகனம் ஓட்டினால் பெற்றோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் சலீம், ‘தி இந்து'விடம் கூறியதாவது: 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் விதிமுறைகளை மீறி, மிக வேகமாக வாகனங்களை இயக்கி, விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இத்தகைய விபத்துகளில் கடந்த ஆண்டில் மட்டும் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. சட்டவிரோத மாக வாகனம் ஓட்டும் இளைஞர் களின் பெற்றோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்தகைய செயல் களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் பெற்றோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் வட் டார போக்குவரத்து கழகத்துக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பெற் றோர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர் கள் வாகனம் இயக்குவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக பெங்களூரு போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT