Published : 11 Jul 2015 09:58 AM
Last Updated : 11 Jul 2015 09:58 AM
முறைகேடு குற்றச்சாட்டுகளால் திணறி வரும் மத்தியப்பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்), நாளை நடை பெறவிருந்த தனியால் பல் மருத் துவமனை சேர்க்கைக்கான நுழை வுத்தேர்வை ஒத்தி வைத்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள நுழைவுத்தேர்வில், தேர்வர் கள் எழுதும் அனைத்து ஓஎம்ஆர் விடைத்தாள்களையும் ஸ்கேன் செய்யும்படி, தனியால் பல் மருத்துவமனை மற்றும் மருத்து வக் கல்லூரிகள் சங்கத்துக்கு (ஏபிடிஎம்சி) மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, பல் மற்றும் மருத்துவ சேர்க்கை தேர்வை (டிமாட்) ஒத்தி வைத்து வியாபம் அமைப்பு அறிவித்துள்ளது.
“தொழில்நுட்ப காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வில் தொடர்புடைய அனைத்து தொழில்நுட்ப வசதி களும் முறையாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய எங்க ளுக்கு போதுமான அவகாசம் தேவைப்படுவதால் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது” என ஏபிடிஎம்சி தலைவர் வி.கே. மகாதிக் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT