Published : 01 Jun 2015 11:33 AM
Last Updated : 01 Jun 2015 11:33 AM
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி கர்னல் மனீஷ் மேஹ்தா கூறும்போது, "காஷ்மீர் மாநிலம் கிருஷ்ண காட்டி பகுதியில் எல்லைக் கட்டுப்பட்டுப் பகுதியில் இன்று அதிகாலை 12.05 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். தானியங்கி துப்பாக்கிகள், ராக்கெட் கிரணேடுகள் கொண்டு பாகிஸ்தான் தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதல் 12.30 மணி வரை நீடித்தது.
பின்னர் மீண்டும் காலை 6 மணிக்கு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது.
இருப்பினும் இந்தியத் தரப்பில் பதில் தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை. ஆனால், எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT