Published : 17 Jun 2015 10:36 AM
Last Updated : 17 Jun 2015 10:36 AM
மேகாலயாவில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக 2 இடங்களில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலியாயினர்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை துணை ஆணையர் பிரவின் பக் ஷி கூறியதாவது:
மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நகாம் பஜார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஒரு வீடு மண்ணில் புதைந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் 2 குழந்தைகள் என 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் அக்கோங்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 70 வயது முதியவர் காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் புதிய விதிமுறைப்படி, நிலச்சரிவில் சிக்கியவர்களின் வாரிசுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT