Last Updated : 03 May, 2015 11:54 AM

 

Published : 03 May 2015 11:54 AM
Last Updated : 03 May 2015 11:54 AM

கோவாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

கோவாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை,

இது குறித்து கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷனின் செய்தித் தொடர்பாள பபன் கடே கூறும்போது, "இன்று காலை 6.30 மணியளவில் எர்ணாகுளம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் பாலி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.

ரயில் மும்பையில் இருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த மார்க்கத்தில் ரயில் பயணம் தாமதமாகும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x