Published : 19 May 2015 08:30 PM
Last Updated : 19 May 2015 08:30 PM
2015 ஏப்ரல் மாதத்தில் சரக்குப் போக்குவரத்தில் ரயில்வே துறை ரூ.9,461.47 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.8071,.18 கோடியாக இருந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலை விட இந்த ஆண்டு ஏப்ரலில் வருவாய் 17% அதிகரித்துள்ளது.
இதில் ரூ.4,623 கோடிக்கான, 46.07 மில்லியன் டன்கள் நிலக்கரி, ரூ.573.12 கோடி இரும்புதாது ஏற்றுமதி, உருக்கு ஆலை மற்றும் பிற உள்நாட்டு வாடிக்கையாளர்கள் சரக்குகளை கையாண்டதன் மூலம் பங்களிப்பு செய்துள்ளது, மேலும், 9.38 மில்லியன் டன்கள் சிமெண்ட் மூலம் ரூ.872.99 கோடி வருவாய் கிட்டியுள்ளது.
மேலும் உணவு தானியங்கள் வகையில் 3.28 மில்லியன் டன்களுக்கான ரூ.570.17 கோடி, பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் லூப்ரிகண்ட் போக்குவரத்து வகையில் ரூ.502.08 கோடி, உற்பத்தி நிறைவு பெற்ற உருக்குப் பொருட்கள் போக்குவரத்து வகையில் ரூ.554.512 கோடி, 3.43 டன்கள் உர போக்குவரத்து வகையில் ரூ.475.05 கோடி, இரும்பு தாது நீங்கலாக உருக்கு ஆலைகளுக்கான உற்பத்திப் பொருட்கள் போக்குவரத்து வகையில் 1.64 டன்களுக்கு ரூ.178.65 கோடி மற்றும் பிற சரக்குகள் போக்குவரத்து மூலம் ரூ.445.84 கோடியும், ரூ.665.29 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
இதனை ரயில்வே அமைச்சக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT