Last Updated : 20 May, 2015 04:23 PM

 

Published : 20 May 2015 04:23 PM
Last Updated : 20 May 2015 04:23 PM

ஒராண்டு நிறைவு விழா: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி தனது மூத்த அமைச்சரவை சகாக்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது தனது அரசின் ஓராண்டு நிறைவு நாள் நிகழ்ச்சிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

சீனா, மங்கோலியா, தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் பிரதமர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார். இந்நிலையில் மூத்த அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி ஆகியோரிடம் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவு விழாவை வரும் 26-ம் தேதி கொண்டாடுவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இவ்விழா தொடர்பாக பாஜக தலைவர் அமித்ஷாவும் பிரதமரை சந்தித்தார்.

கடந்த ஓராண்டில் மத்திய அரசு மேற்கொண்ட பணிகள், குறிப்பாக சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்குமாறு அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x