Last Updated : 19 May, 2015 03:41 PM

 

Published : 19 May 2015 03:41 PM
Last Updated : 19 May 2015 03:41 PM

ஜெ. வழக்கில் கர்நாடக அரசுக்கு சுப்பிரமணியன் சுவாமி நெருக்கடி: கர்நாடக காங்கிரஸ் குற்றச்சாட்டு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கர்நாடக அரசுக்கு பாஜக மூத்த‌ தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நெருக்கடி கொடுத்து வ‌ருவதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவர் சி.எம்.தனஞ்செய் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூரு வில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடை பெற்றது. இந்த வ‌ழக்குக்கும் கர்நாடக அரசுக்கும் எவ்வித தொடர் பும் கிடையாது. தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை நிரபராதி என்று விடுதலை செய் துள்ளது. எனவே அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் வருகின்றன.

வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஒருவேளை கர்நாடக அரசு செய்யாவிட்டாலும் நான் செய்வேன்’ என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசி வருகிறார். இதன் மூலம் கர்நாடக அரசுக்கு அவர் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

முதலில், ஜெயலலிதா விடு தலை குறித்து பாஜகவின் கருத்து என்ன? பாஜக ஆட்சியில் இருந்தால் மேல்முறையீடு செய்வார்களா? என்பதை சுப்பிரமணியன் சுவாமி தெளிவுபடுத்த வேண்டும். இப் பிரச்சினையில் பாஜக ஏன் வெளிப் படையான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை?

இவ்வாறு தனஞ்செய் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x