Published : 16 Apr 2015 09:00 AM
Last Updated : 16 Apr 2015 09:00 AM

ஆந்திர மாநிலம் குண்டூரில் பரிதாபம்: தெரு நாய்கள் கடித்ததில் 6 வயது சிறுமி பலி

ஆந்திர மாநிலத்தில் நேற்று தெரு நாய்கள் விரட்டி கடித்துக் குதறி யதில் 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

குண்டூர் மாவட்டம், காக்கமானு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஷேக் கவுஸர் (6) நேற்று காலையில் வீட்டுக்கு வெளியே தனியாக விளை யாடிக் கொண்டிருந்தாள். அப் போது சுமார் 10 தெரு நாய்கள் சிறுமியை சுற்றி வளைத்து கடித் துக் குதறின. இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தாள்.

குண்டூர் மாநகராட்சி அதிகாரி களின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம் என்று கூறி, சிறுமியின் சடலத்தை சாலையில் வைத்து அவரது பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குண்டூர் மாவட்ட ஆட்சியர் காந்தி லால் தண்டே நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் தெரு நாய்கள் கடித் ததில் படுகாயமடைந்த ஒரு பெண் குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x