Published : 24 Apr 2015 09:27 AM
Last Updated : 24 Apr 2015 09:27 AM
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை துபாயில் இருந்து விமானத்தில் வந்த சமீரா, சந்தியா எனும் இரண்டு பெண்களிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர்களிடம் 7 கிலோ மதிப்புள்ள தங்க பிஸ்கெட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தங்க பிஸ்கெட்கள் குறித்து எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT