Published : 03 Apr 2015 12:28 PM
Last Updated : 03 Apr 2015 12:28 PM

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 3-வது நாளாக மூடல்: பயணிகள் தவிப்பு

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இதனால், காஷ்மீருக்கு செல்வதற்காக நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

காஷ்மீருக்கு செல்வதற்கான முக்கியப் பாதை மூடப்பட்டதால், அம்மாநிலத்துக்கு மற்ற பகுதிகளில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதிதாக 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x