Last Updated : 07 Apr, 2015 09:07 AM

 

Published : 07 Apr 2015 09:07 AM
Last Updated : 07 Apr 2015 09:07 AM

2ஜி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் சாட்சிகளின் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவை பரிசோதித்த டாக்டர் சாட்சியளிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.

இந்தத் தகவலை எதிர்த் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சாட்சிகளின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இவ்வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x