Published : 19 Mar 2015 09:46 AM
Last Updated : 19 Mar 2015 09:46 AM

ஆந்திர ஆளுநர் நரசிம்மனுக்கு உடல் நலம் பாதிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த ஆந்திர ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மனுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பொது ஆளுநராக உள்ள ஈ.எஸ்.எல். நரசிம்மன், 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்றுமுன்தினம் இரவு திருப்பதி வந்தார். இவர் நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் 4 நாள் தேசிய வேத கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இவருக்கு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அவர் நேற்று ரேணிகுண்டாவிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x