Published : 06 Mar 2015 11:32 AM
Last Updated : 06 Mar 2015 11:32 AM

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்குக்கு உடல் நலக்குறைவு

சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.

கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் அவருக்கு வழக்கமான ரத்த பரிசோதனைகளுடன் பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனையும் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார். அவரை ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறும் வெளியூர் பயணங்களை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x