Published : 16 Apr 2014 09:42 AM
Last Updated : 16 Apr 2014 09:42 AM
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி., டி.ஹச்.ஹச்.எல்.சி., ஏ.ஹச்.எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட 5 தேர்வுகளின் முடிவுகளை கல்வித் துறை அமைச்சர் அப்து ரப் காலை 11.30 மணிக்கு வெளியிடுகிறார்.
மொத்தம் 4,64,310 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு ஒரு வாரத்துக்கு முன்பே முடிவுகள் வெளியிடப்படுகின்றன. புனித வெள்ளி, ஈஸ்டர் என தொடர்ச்சியான விடுமுறைகளின் காரணமாக இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் முன்னதாகவே வெளியிடப்படுவதாக கேரள கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT