Published : 03 Feb 2015 01:36 PM
Last Updated : 03 Feb 2015 01:36 PM

கோவாவில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் பலி

கோவா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

இதுவே, பன்றிக் காய்ச்சல் நோய்க்கு அம்மாநிலத்தில் நேர்ந்த முதல் பலி என மாநில சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "ஹாங்காங்கில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவா வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டன.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கோவா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவே முதல் பலி.

பலியான நபருடன் வந்த 4 பேருக்கும் நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x