Last Updated : 28 Feb, 2015 02:24 PM

 

Published : 28 Feb 2015 02:24 PM
Last Updated : 28 Feb 2015 02:24 PM

நிர்பயா நிதிக்கான ஒதுக்கீடு உயர்வு

நிர்பயா நிதிக்கான ஒதுக்கீடு இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜேட்லி, நிர்பயா நிதிக்கான ஒதுக்கீடு இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதன்படி நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர் நலன், பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு அக்கறை செலுத்துவதால் நிர்பயா நிதிக்கான ஒதுக்கீடு இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என ஜேட்லி கூறினார்.

கடந்த 2013-ல் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நிர்பயா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x