Published : 26 Jan 2015 11:04 AM
Last Updated : 26 Jan 2015 11:04 AM
ஒபாமா நேற்று டெல்லி வந்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்றார். வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும்போது, விமான நிலையத்துக்கு பிரதமரோ அல்லது குடியரசுத் தலைவரோ சென்று வரவேற்பது மரபு இல்லை. மத்திய அமைச்சர்கள் தான் வரவேற்பது வழக்கம்.
இதையொட்டி ஒபாமாவை வரவேற்கும் வரவேற்பு குழு தலைவராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென பிரதமர் நரேந்திர மோடி பாலம் விமான நிலையத்துக்கு வந்தார். ஒபாமாவின் விமானம் தரையிறங்கியதும், விமானத்தின் அருகில் சென்று ஒபாமாவை கட்டித்தழுவி வரவேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT