Published : 08 Jan 2015 11:25 AM
Last Updated : 08 Jan 2015 11:25 AM
கடும் மூடு பனியால் டெல்லியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் அடர்ந்த பனி மூட்டம் இருந்ததால் ரயில் பாதை சரியாக தெரியவில்லை.
இதனால் 42 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. காலையில் குளிர்நிலை 7.2 டிகிரியாக இருந்தது.
இது குறித்து வடக்கு ரயில்வே நிர்வாகம் கூறுகையில், "டெல்லியில் நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக 41 ரயில்கள் தாமதமாக சென்றன. ஒரு ரயிலின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT