Published : 03 Dec 2014 12:23 PM
Last Updated : 03 Dec 2014 12:23 PM
சிபிஐ இயக்குநராக இருந்த ரஞ்சித் சின்ஹா நேற்று ஓய்வு பெற்றார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் இப்பொறுப்பில் இருந்தார்.
பதவி காலம் முடிய சில நாள்களே இருந்த காலகட்டத்தில் 2ஜி வழக் கில் தொடர்புடையவர்களை தனது வீட்டில் சந்தித்ததான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி சர்ச்சையில் சிக்கினார். அவர் 1974-ம் ஆண்டு பிஹாரில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் சக அதி காரிகள் அளித்த பிரிவு உபசார விழாவில் பேசிய ரஞ்சித் சின்ஹா, இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி ஓய்வு பெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். எனினும் சிபிஐ-யின் நலன் கருதிதான் முடிவுகளை நான் எடுத்தேன் என்பதை காலம் தெளிவாக்கும். கடந்த சில நாள் களாக ஊடகங்களில் என்னைப் பற்றி எதிர்மறையான செய்திகளே அதிகம் வந்தன. இது நான் 40 ஆண்டுகளாக ஆற்றிய சிறப்பான பணிகளை மறக்க செய்துவிட்டது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT