Published : 01 Dec 2014 09:28 AM
Last Updated : 01 Dec 2014 09:28 AM
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, முக்கியப் பிரச்சினைகளில் பின்வாங்கி வருவதாகவும் முந்தைய அரசின் திட்டங்களை திருடுவதாகவும் சுட்டிக்காட்டி ஒரு கையேட்டை இன்று வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத் தில் பிரச்சினை எழுப்பவும் திட்ட மிட்டுள்ளது.
33 பக்கங்களைக் கொண்ட இந்த கையேட்டில், கருப்புப் பண விவகாரத்தில் பின் வாங்கியது, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சினையைக் கையாண்ட விதம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நேரடி பணப் பரிமாற்ற திட்டம், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத் துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, பல் வேறு விஷயங்களில் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இதைச் சுட்டிக் காட்டும் கையேட்டை திங்கள் கிழமை வெளியிடுகிறோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் திட்டமான நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தை பாஜக குறை கூறிவந்தது. ஆனால் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்த நிலையில் அந்த திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கர்நாடகாவில் பேசிய நரேந்திர மோடி, “ஆதார் திட்டம் தோல்வியடைந்த போதிலும் அதை யுபிஏ அரசு செயல்படுத்து கிறது” என குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது ஆதார் எண் அவசியம் எனக் கூறி அதை தொடர முடிவு செய்துள்ளது என்றார்.
இதற்கு முன்பு ‘தவறான ஆட்சி யின் 100 நாட்கள்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி ஒரு கையேடு வெளியிட்டது. அதில் தேர்தல் வாக் குறுதியை பாஜக அரசு நிறை வேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், மோடி ஒரு கனவு வியாபாரி என்றும் பொய்யான கனவுகளை விற்கிறார் என்றும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT