Published : 25 Nov 2014 09:51 AM
Last Updated : 25 Nov 2014 09:51 AM
மேற்கு வங்கத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் இருந்து எந்த சூழ்ச்சியாலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
சராதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ரின்ஜாய் போஸ் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப் பட்டதை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக மம்தா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் நேற்று மம்தா பேசும்போது, “எங்களுக்கு எதிராக பாஜக சூழ்ச்சி செய்து வருகிறது. மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்வதில் இருந்து எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
மருந்துகளுக்கு நியாய விலைக் கடை தொடங்கிய முதல் மாநிலம் மேற்கு வங்கம். அரசு மருத்துவமனைகளில் இருந்த கட்டண வார்டுகள் இலவச வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. பெண் கல்வியை ஊக்குவிக்கவும் இளம்வயது திருமணத்தை தடுக்கவும் ‘கன்னியாஸ்திரி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டமும் நாட்டில் முதல்முறையாக இங்குதான் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசு பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை குற்றம் சாட்டிய மம்தா, மத்திய அரசுக்கு தைரியமிருந்தால் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தட்டும் என்று சவால் விடுத்தார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT