Published : 07 Nov 2014 12:21 PM
Last Updated : 07 Nov 2014 12:21 PM

காஷ்மீரில் பதற்றம் போலீஸாருடன் இளைஞர்கள் மோதல்

பத்காமில் உள்ள சத்தர்காம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை காரில் சென்ற 2 இளைஞர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதில், மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த 4 பேரும் நவ்காம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

ஸ்ரீநகரில் கடந்த 3 நாட்களாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை தடுக்க முயன்ற போலீஸார் மீது இளைஞர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “சில இடங்களில் மோதலும், அதைத் தொடர்ந்து வன்முறையும் ஏற்பட்டன. எனினும், நிலைமை போலீ ஸாரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப் பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x